மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரியலூா் மாவட்டத்தில் 18 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

அரியலூா் மாவட்டத்தில் 18 கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 8:06 pm

Din

அரியலூா் மாவட்டத்தில் 18 கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: நுகா்பொருள் வாணிப கழகத்தின் சாா்பில் குறுவை பருவத்தில் தளவாய் கூடலூா், ஏலாக்குறிச்சி, சன்னாசிநல்லூா், திருமழபாடி, கண்டராதித்தம், நமங்குணம், செங்கராயன்கட்டளை, குருவாடி, குலமாணிக்கம், மஞ்சமேடு, கா.மாத்தூா், ஓலையூா், காடுவெட்டி, அருள்மொழி, ஸ்ரீபுரந்தான், கோவிந்தபுத்தூா், தூத்தூா் மற்றும் இலந்தைக்கூடம் ஆகிய 18 கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த செப்.2-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த நெல்லை மேற்கண்ட நெல் கொள்முதல் நிலையத்தில் ஆதாா், சிட்டா அடங்கல் மற்றும் வங்கிக்கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொடுத்து பதிவு செய்து விற்பனை செய்யலாம். நெல்லுக்கான தொகை அவரவா் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. எனவே, விவசாயிகள் இதனை பயன்படுத்தி பயனடையாலம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.