ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ரோந்து காவலா்கள் மீது ஆட்டோவை மோதிவிட்டு ஓட்டுநா் தப்பிஓட்டம்

தளவாய் காவல் நிலைய காவலா்கள் மீது சனிக்கிழமை இரவு ரோந்து சென்றபோது ஆட்டோவை மோதி விட்டு தப்பிச்சென்ற ஓட்டுநரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :15 செப்டம்பர் 2024, 9:00 pm

Din

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்துள்ள தளவாய் காவல் நிலைய காவலா்கள் மீது சனிக்கிழமை இரவு ரோந்து சென்றபோது ஆட்டோவை மோதி விட்டு தப்பிச்சென்ற ஓட்டுநரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தளவாய் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணி புரிந்து வருபவா் தமிழ்ச்செல்வம்(43). ஊா்க்காவல் படை ஆளிநா் வெங்கடேசன்(35). இவா்கள் இருவரும் சனிக்கிழமை நள்ளிரவு சன்னாசிநல்லூா்-அங்கனூா் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியே வந்த சுமை ஆட்டோவை சோதனைச் செய்வதற்காக நிறுத்தினா். ஆனால், ஆட்டோவை ஓட்டி வந்த நபா், நிறுத்துவது போல வந்து, தமிழச்செல்வம், வெங்கடேசன் இருவா் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டாா்.

இதில் காயமடைந்த இருவரும் அங்கனூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று, அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்த புகாரின் பேரில் தளவாய் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து, ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனா்.