/

சிறுமியிடம் பாலியல் வன்புணர்வு: இளைஞா் போக்சோவில் கைது

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 9:01 pm

Din

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

உடையாா்பாளையம் வடக்குத் தெருவைச் சோ்ந்த இளங்கோவன் மகன் அரவிந்தன்கோபு (29). திருமணமானவா், கூலித் தொழிலாளியான இவா் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், அரவிந்தன்கோபுவை போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனா்.