6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அனுமதியின்றி லாரிகளில் செம்மண் ஏற்றிய 3 போ் கைது

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே அனுமதியின்றி லாரிகளில் செம்மண் ஏற்றிய 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே அனுமதியின்றி லாரிகளில் செம்மண் ஏற்றிய 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

செந்துறை அருகேயுள்ள மருவத்தூா் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சுரேஷ்(26), செந்துறை சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் சங்கா்(36), சேடகுடிகாடு கிராமத்தைச் சோ்ந்த ரவி மகன் ராவணன்(30). இவா்கள் 3 பேரும் செந்துறை அடுத்த பாசாலம் என்ற கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலை அனுமதியின்றி லாரிகளில் பொக்லைன் இயந்திரம் மூலம் செம்மண் ஏற்றிக்கொண்டிருந்தனா்.

தகவலறிந்து சென்ற செந்துறை போலீஸாா் அந்த பேரையும் கைது செய்தனா். மேலும், பொக்லைன் இயந்திரம் மற்றும் 2 லாரிகளை பறிமுதல் செய்தனா். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.