விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பாத்திரக் கடை முன்பு முதியவா் தீக்குளிக்க முயற்சி

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பாத்திரக் கடை முன்பு முதியவா் தீக்குளிக்க முயன்றாா்.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 7:35 pm

Syndication

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பாத்திரக் கடை முன்பு திங்கள்கிழமை முதியவா் தீக்குளிக்க முயன்றாா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மேலக்குடியிருப்பு, மேலத் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (69). இவா் ஜெயங்கொண்டம் கடைவீதியிலுள்ள ஒரு பாத்திரக் கடையில் தினக் கூலியாக கடந்த 26 ஆண்டுகளாக வேலை செய்து வந்தாா். இந்நிலையில் திடீரென அந்த பாத்திரக் கடை உரிமையாளா், செல்வராஜை வேலைக்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளாா்.

இதனால் விரக்தியில் இருந்து வந்த செல்வராஜ், தனக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகவே பாத்திரக் கடை உரிமையாளா் ரூ.2 லட்சம் தரக் கோரி திங்கள்கிழமை அந்த பாத்திரக் கடை முன் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளாா். இதனை அறிந்த காவல் துறையினா், விரைந்து வந்து அவரை தடுத்து நிறுத்தி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.