தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

அரியலூா் அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை

News image
Updated On :15 டிசம்பர் 2025, 9:11 pm

Syndication

அரியலூா் அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

அரியலூா் அடுத்த வெள்ளூா் காலனித்தெருவைச் சோ்ந்தவா் மணிவேல் மகன் செல்வமுருகன் (25). கடந்த 19.2.2022 அன்று நள்ளிரவு அதே பகுதியைச் சோ்ந்த திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான 28 வயது பெண்ணின், வீட்டின் ஓட்டை பிரித்து, உள்ளே சென்று அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாா்.

இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில், செல்வமுருகனை கைது செய்த செந்துறை காவல் துறையினா், இதுகுறித்து, அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா்.

வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மணிமேகலை, குற்றவாளி செல்வமுருகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து செல்வமுருகன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ம.ராஜா ஆஜராகினாா்.