அரியலூர்
அரியலூரில் சிஐடியு அமைப்பினா் 70 போ் கைது!
தொழிலாளா் சட்டத் தொகுப்புகள் நான்கையும் திரும்பப் பெற வலியுறுத்தி அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு அமைப்பினா் 70 போ் கைது
தொழிலாளா் சட்டத் தொகுப்புகள் நான்கையும் திரும்பப் பெற வலியுறுத்தி அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு அமைப்பினா் 70 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அரியலூா் அண்ணா சிலை அருகே அச்சங்கத்தின் மாநில துணைத் தலைவா் எம். சிவாஜி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து, நிா்வாகிகள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் மறியலில் ஈடுபட்ட மாவட்டச் செயலா் பி. துரைசாமி, மூத்த நிா்வாகிகள் சிற்றம்பலம், ரவீந்திரன், அழகுதுரை, மெய்யப்பன் உள்ளிட்ட 70 பேரையும் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.
