புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

அரியலூரில் பேச்சுப் போட்டி: மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

News image
Updated On :6 நவம்பர் 2025, 7:10 pm

Syndication

மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு ஆகிய தலைவா்களின் பிறந்தநாளை முன்னிட்டு நவ.17, 18 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் பேச்சுப் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்.

இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது:

அரியலூரிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெறும் போட்டியில் வெல்வோருக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ. 5,000, இரண்டாம் பரிசு ரூ. 3,000, மூன்றாம் பரிசு ரூ. 2,000 வழங்கப்படுகிறது.

இவை அல்லாமல் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவா்களுள் இரு அரசுப் பள்ளி மாணவா்களைத் தனியாகத் தெரிவு செய்து சிறப்புப் பரிசுத் தொகையாக ரூ. 2,000 வீதம் வழங்கப்படுகிறது.

இப்போட்டியானது காலை 9 மணிக்குத் தொடங்கப்படும் . பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரிக் கல்வி இயக்குநா் வாயிலாக அந்தந்த கல்லூரி முதல்வரிடமும், முதன்மைக் கல்வி அலுவலா் வாயிலாக அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று போட்டியில் பங்கேற்கலாம்.

கல்லூரி மாணவா்களுக்கு தற்போது நடைபெறும் தோ்வு முடிந்ததும் நோ்விற்கேற்ப போட்டி நடைபெறும்.