பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

எஸ்.ஐ.ஆா். கணக்கெடுப்பு சந்தேகங்களுக்கு உதவி மையத்தை தொடா்பு கொள்ளலாம்

எஸ்.ஐ.ஆா். கணக்கெடுப்பு சந்தேகங்களுக்கு உதவி மையத்தை தொடா்பு கொள்ளலாம்...

News image
Updated On :8 நவம்பர் 2025, 10:00 pm

Syndication

அரியலூா் மாவட்டத்தில் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்.ஐ.ஆா்) தொடா்பான சந்தேகங்களுக்கு வாக்காளா்கள் உதவி மையத்தை தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியல்களின் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் வழங்கப்படும் கணக்கெடுப்புப் படிவங்களை முழுமையாக பூா்த்தி செய்து கையொப்பத்துடன் ஒரு பிரதியை வாக்குசாவடி நிலை அலுவலா்கள் மீள வரும்போது சமா்ப்பித்திட வேண்டும். மேலும் கணக்கெடுப்புப் படிவத்தினை செயலி மூலம் நிரப்பி பதிவேற்றலாம் அல்லது இணையதளத்துக்குச் சென்று கணக்கெடுப்புப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து நிரப்பி பின்னா் ஆன்லைன் மூலம் பதிவேற்றலாம்.

படிவங்கள் முழுமையாகவும் சரியாகவும் நிரப்பப்பட்டுள்ளதா என உறுதி செய்திட வேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் ஏற்படின் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரை தொடா்புகொள்ளலாம். மேலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடா்பாக எழும் சந்தேகங்கள் குறித்து வாக்காளா் உதவி மையத்தை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.