மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

செந்துறை அருகே பெண் சிசுவின் சடலம் மீட்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே பிறந்து சில நாள்களே ஆன பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.

News image
Updated On :11 நவம்பர் 2025, 10:41 pm

Syndication

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே பிறந்து சில நாள்களே ஆன பெண் சிசுவின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

செந்துறை அருகேயுள்ள குழுமூா் கிராமத்தில், காரப்பாடி செல்லும் சாலையில் உள்ள ஒரு குப்பை குவியலில், செவ்வாய்க்கிழமை அழுகிய நிலையில் பிறந்த சில நாள்களே ஆன பெண் சிசு ஒன்று கிடப்பதாக செந்துறை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினா் சிசுவின் சடலத்தை மீட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.