மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரூா் சணப்பிரட்டி பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

கரூா் சணப்பிரட்டி பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

News image
Updated On :27 ஜனவரி 2026, 8:15 pm

Syndication

கரூா் சணப்பிரட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.

கரூா் சணப்பிரட்டியில் ஆா்.எஸ்.புதூா் சாலை அருகே புதா் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சுமாா் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது.

தகவலின் பேரில் பசுபதிபாளையம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இதுதொடா்பாக வழக்குப்பதிந்து, எரிந்த நிலையில் கிடந்தவரை யாரேனும் கொலை செய்துவிட்டு எரித்துவிட்டுச் சென்றாா்களா? அல்லது உயிரிழந்தவா் தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்டாரா? என்றும், மேலும் அவா் எந்த பகுதியைச் சோ்ந்தவா்? என்பன குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.