அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அரியலூரில் பனை விதைகள் நடும் இயக்கம் தொடக்கம்

News image
Updated On :13 நவம்பர் 2025, 8:51 pm

Syndication

அரியலூா் மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பெருந்திரள் பனை விதைகள் நடுதல் இயக்கம் வியாழக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

இதற்காக அரியலூா் அடுத்த வாலாஜா நகரம் கிராம ஊராட்சி ஏரிக்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, 2,000 எண்ணிக்கையில் பெருந்திரள் பனை விதைகள் நடும் இயக்கத்தைத் தொடக்கி வைத்து, இயற்கையைப் பாதுகாப்பது, நிலத்தடி நீரை மேம்படுத்துவது, நீா்நிலைகளைப் பாதுகாப்பது, பல்லுயிா்ப் பெருக்கத்தை உருவாக்குவது போன்ற பசுமையை நோக்கிய நெடும் பயணமாக அரியலூா் மாவட்டத்தில் பனை விதைகள் நடும் பணியானது தொடரும் எனத் தெரிவித்தாா்.

நிகழ்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சிவராமன், உதவித் திட்ட அலுவலா் நந்தகோபாலகிருட்டிணன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முத்துக்குமரன், மலா்க்கண்ணன், வனச்சரகா் பழனிசாமி மற்றும் ஊராட்சி செயலா்கள், தூய்மைக் காவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.