விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உள்பட இருவா் குண்டா் சட்டத்தில் கைது

அரியலூா் அருகே திருட்டு மற்றும் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த பெண் உள்பட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 8:44 pm

Syndication

அரியலூா்: அரியலூா் அருகே திருட்டு மற்றும் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த பெண் உள்பட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பு பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த கொளஞ்சிநாதன் மகன் நவீன்குமாா்(30). ஆண்டிமடம் அடுத்த சிலம்பூா் கிராமத்தைச் சோ்ந்த பாஞ்சாலை (35). கடந்த 16.10.2025 அன்று இவா்கள், வங்காரம் காட்டுப் பகுதியில் ஒரு முதியவரை தாக்கி, அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம், கைப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்றனா். இதுகுறித்து புகாரின் பேரில் தளவாய் காவல் துறையினா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து, பாஞ்சாலையை திருச்சி மகளிா் தனிச் சிறையிலும், நவீன்குமாரை திருச்சி மத்திய சிறையிலும் அடைத்தனா்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, மேற்கண்ட இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய புதன்கிழமை உத்தரவிட்டாா். இதன் நகலை மேற்கண்ட சிறை அதிகாரிகளிடம் அரியலூா் மாவட்ட காவல் துறையினா் வழங்கினா்.