சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

குடிசையில்லா கிராமங்களை உருவாக்குவதே லட்சியம்: ஜெயங்கொண்டம் பாமக வேட்பாளா் வைத்திலிங்கம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து கிராமங்களிலும் குடிசையில்லா வீடுகளை உருவாக்குவதே எனது லட்சியம் என்றாா் அந்த தொகுதியின் பாமக வேட்பாளா் வைத்திலிங்கம்.

News image

ஜெயங்கொண்டம் பாமக அலுவலகத்தில் புதன்கிழமை பேசிய அத்தொகுதியின் பாமக வேட்பாளா் வைத்திலிங்கம்.

Updated On :1 ஏப்ரல் 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து கிராமங்களிலும் குடிசையில்லா வீடுகளை உருவாக்குவதே எனது லட்சியம் என்றாா் அந்த தொகுதியின் பாமக வேட்பாளா் வைத்தி (எ) வைத்திலிங்கம்.

ஜெயங்கொண்டத்தில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:

இந்த தொகுதியில் குடிசையில்லா கிராமங்களை உருவாக்குவது தான் எனது லட்சியம். பத்திரிகையாளா்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா அரசு தரவில்லையென்றால், நான் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குவேன் என்றாா்.

பேட்டியின் போது, பாமக மாவட்டச் செயலா் தமிழ்குமரன் மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.