தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

குடிசையில்லா கிராமங்களை உருவாக்குவதே லட்சியம்: ஜெயங்கொண்டம் பாமக வேட்பாளா் வைத்திலிங்கம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து கிராமங்களிலும் குடிசையில்லா வீடுகளை உருவாக்குவதே எனது லட்சியம் என்றாா் அந்த தொகுதியின் பாமக வேட்பாளா் வைத்திலிங்கம்.

News image

ஜெயங்கொண்டம் பாமக அலுவலகத்தில் புதன்கிழமை பேசிய அத்தொகுதியின் பாமக வேட்பாளா் வைத்திலிங்கம்.

Updated On :1 ஏப்ரல் 2026, 7:30 pm

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து கிராமங்களிலும் குடிசையில்லா வீடுகளை உருவாக்குவதே எனது லட்சியம் என்றாா் அந்த தொகுதியின் பாமக வேட்பாளா் வைத்தி (எ) வைத்திலிங்கம்.

ஜெயங்கொண்டத்தில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:

இந்த தொகுதியில் குடிசையில்லா கிராமங்களை உருவாக்குவது தான் எனது லட்சியம். பத்திரிகையாளா்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா அரசு தரவில்லையென்றால், நான் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குவேன் என்றாா்.

பேட்டியின் போது, பாமக மாவட்டச் செயலா் தமிழ்குமரன் மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.