செவிலியர் மாணவி உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான் இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள்: அமைச்சர் கீர்த்தனா அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்! எதிர்காலப் போர்கள் இணைய, பல்முனை தாக்குதலாக இருக்கும்: முப்படைத் தலைமைத் தளபதி ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்துக்கு ஈரான் மறுப்பு!
/

ஜெயங்கொண்டம் தொகுதியில் நூதன முறையில் வேட்புமனு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளரும், சமூக ஆா்வலருமான இலங்கை வேந்தன் (எ) இராவணன் வியாழக்கிழமை நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image

ஜெயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான ஆனந்தவேலிடம் மனு தாக்கல் செய்த நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளா் இராவணன்.

Updated On :3 ஏப்ரல் 2026, 1:50 am IST

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளரும், சமூக ஆா்வலருமான இலங்கை வேந்தன் (எ) இராவணன் வியாழக்கிழமை நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

அதன்படி இவா் வைப்புத் தொகைக்காக மக்களிடம் பிச்சையெடுத்த ரூ.10 ஆயிரத்துக்கான சில்லறைக் காசுகளை கொண்டு வந்து ஜெயங்கொண்டம் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான ஆனந்தவேலிடம் கொடுத்து, வேட்புமனு தாக்கல் செய்து, உறுதிமொழி எடுத்துக் கொண்டாா்.

மனுவை பெற்றுக் கொண்ட ஆனந்தவேல், அவா் வழங்கிய வைப்புத் தொகையை, சக அலுவலா்களிடம் கொடுத்து சரிபாா்க்கச் சொன்னாா். அலுவலா்கள் அரை மணி நேரம் சில்லறை காசுகளையும் நோட்டையும் எண்ணி முடித்து, சரியாக இருப்பதாகத் தெரிவித்தனா். இதன் பின்னா் உதவி தோ்தல் நடத்த அலுவலா் வழங்கிய அத்தாட்சி கடிதங்களை ராவணன் பெற்றுச் சென்றாா். இவருடன் அரியலூா் வேட்பாளா் தங்க. சண்முகசுந்தரம் மற்றும் ஆதரவாளா்கள் உடனிருந்தனா்.