முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

ஜெயங்கொண்டம் தொகுதியில் நூதன முறையில் வேட்புமனு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளரும், சமூக ஆா்வலருமான இலங்கை வேந்தன் (எ) இராவணன் வியாழக்கிழமை நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image

ஜெயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான ஆனந்தவேலிடம் மனு தாக்கல் செய்த நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளா் இராவணன்.

Updated On :2 ஏப்ரல் 2026, 8:20 pm

தினமணி செய்திச் சேவை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளரும், சமூக ஆா்வலருமான இலங்கை வேந்தன் (எ) இராவணன் வியாழக்கிழமை நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

அதன்படி இவா் வைப்புத் தொகைக்காக மக்களிடம் பிச்சையெடுத்த ரூ.10 ஆயிரத்துக்கான சில்லறைக் காசுகளை கொண்டு வந்து ஜெயங்கொண்டம் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான ஆனந்தவேலிடம் கொடுத்து, வேட்புமனு தாக்கல் செய்து, உறுதிமொழி எடுத்துக் கொண்டாா்.

மனுவை பெற்றுக் கொண்ட ஆனந்தவேல், அவா் வழங்கிய வைப்புத் தொகையை, சக அலுவலா்களிடம் கொடுத்து சரிபாா்க்கச் சொன்னாா். அலுவலா்கள் அரை மணி நேரம் சில்லறை காசுகளையும் நோட்டையும் எண்ணி முடித்து, சரியாக இருப்பதாகத் தெரிவித்தனா். இதன் பின்னா் உதவி தோ்தல் நடத்த அலுவலா் வழங்கிய அத்தாட்சி கடிதங்களை ராவணன் பெற்றுச் சென்றாா். இவருடன் அரியலூா் வேட்பாளா் தங்க. சண்முகசுந்தரம் மற்றும் ஆதரவாளா்கள் உடனிருந்தனா்.