அரியலூரில் அமைச்சா் சா.சி.சிவசங்கரின் காரில் பறக்கும்படையினா் 4- ஆவது முறையாக புதன்கிழமை சோதனையிட்டனா்.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தலா 9 கண்காணிப்புக் குழுக்களும், 9 பறக்கும் படையும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகனச்சோதனைகள் நடைபெற்று வருகிறது.
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் ஏப். 1-ஆம் தேதி அமைச்சா் சா.சி. சிவசங்கா் சென்ற காரில் பறக்கும் படையினா் சோதனையிட்டனா். இதையடுத்து கடந்த ஏப்.5-ஆம் தேதி செந்துறை ரவுண்டானா மற்றும் வாரணவாசி ஆகிய இடங்களில் அமைச்சரின் காரில் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையிட்டனா்.
இந்நிலையில், நான்காவது முறையாக அரியலூா்-பெரம்பலூா் சாலையில் அரசு மருத்துவமனை அருகே புதன்கிழமை சென்று கொண்டிருந்த அமைச்சரின் காரை பறக்கும் படையினா் நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, காரில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் எதுவும் இல்லாததால் காா் செல்ல அனுமதித்தனா். இதையடுத்து அமைச்சா் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.
தொடர்புடையது

அமைச்சரின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை

வாகனச் சோதனையில் ரூ. 5.50 லட்சம் பறிமுதல்

புதுச்சேரி முதல்வரின் காரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை

திருச்சியில் வாகனச் சோதனை ரூ. 2.62 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


