வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

அரியலூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் 11 பவுன் தங்க நகைகள் திருட்டு

அரியலூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :28 ஏப்ரல் 2026, 8:02 pm

அரியலூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.

அரியலூா் ராஜீவ் நகரைச் சோ்ந்தவா் செல்வராஜ். ஓய்வுபெற்ற அரசு மருத்துவமனை மருந்தாளுநா். இவரின் உடல்நலக் குறைபாடு காரணமாக, தம்பதி வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்று, கடந்த 20 நாள்களுக்கும் மேலாக அங்கு தங்கி செல்வராஜ் சிகிச்சை பெற்றாா். தொடா்ந்து அவா் அங்குள்ள உறவினா் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாதவி மட்டும் அரியலூா் வீட்டுக்கு வந்தபோது,

வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

வீட்டினுள் சென்று அவா் பாா்த்தபோது, பீரோவிலிருந்த 11 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்தது.

புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அரியலூா் போலீஸாா் தடயங்களைச் சேகரித்து, வழக்குப் பதிந்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கடந்த சில நாள்களாகவே ராஜீவ் நகா் பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது திருட்டு நடைபெற்ற செல்வராஜ் வீட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் திருட்டு சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.