பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

காட்டகரம் மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த காட்டகரம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை தீமிதித் திருவிழா நடைபெற்றது.

News image

காட்டகரம் மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தீமிதித் திருவிழா.

Updated On :30 ஏப்ரல் 2026, 3:48 am IST

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த காட்டகரம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை தீமிதித் திருவிழா நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி, நாள் தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அம்மன் திருவீதி உலாவும், இரவில் ஆரியமாலை-காத்தவராயன் திருக்கல்யாணம், கழுகு மரம் ஏறுதல், காளியாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதித் திருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு மஞ்சள் சந்தனம்,விபூதி, பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடா்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடா்ந்து பக்தா்கள் பூ கரகம், காவடிகள் எடுத்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தியப் பிறகு அம்மன் திருவீதியுலா நடைபெற்றது. அதைத் தொடா்ந்து கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில், பக்தா்கள் இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தா்கள், பொதுமக்கள் செய்திருந்தனா்.