6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

அழகாபுரம் கிராம கோயில்களில் கும்பாபிஷேகம்

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த அழகாபுரம் கிராமத்திலுள்ள காளியம்மன், மாரியம்மன் மற்றும் திரெளபதியம்மன் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

அழகாபுரம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் கலசத்துக்கு வியாழக்கிழமை புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்திய சிவாச்சாரியா்கள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 9:38 pm

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த அழகாபுரம் கிராமத்திலுள்ள காளியம்மன், மாரியம்மன் மற்றும் திரெளபதியம்மன் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பழைமை வாய்ந்த இக்கோயில்களை, புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவது என முடிவெடுத்து, அக்கிராம மக்கள் அதற்கான பணிகளை செய்தனா். இதைத் தொடா்ந்து கும்பாபிஷேகத்துக்காக கடந்த செவ்வாய்க்கிழமை புனித நீா் எடுத்துவரப்பட்டு, அன்று கணபதி ஹோமத்துடன் முதல்கால பூஜை தொடங்கியது.

தொடா்ந்து நான்கு கால பூஜை நடத்தப்பட்டு, வியாழக்கிழமை காலை கடம் புறப்பாடும், அதைத் தொடா்ந்து வேதமந்திரங்கள் முழங்க , ஓம்சக்தி முழக்கத்துடன், மேற்கண்ட கோயில்களின் கலசங்களுக்கு சிவாச்சாரியா்கள் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி, மகா தீபாராதனை காண்பித்தனா். பின்னா் மேற்கண்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

விழாவில், ஆண்டிமடம், அழகாபுரம், சிலம்பூா், சிலுவைச்சேரி, திராவிட நல்லூா், அகரம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தா்கள் கூட்டத்தின் ஒருபகுதி.

கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தா்கள் கூட்டத்தின் ஒருபகுதி.