குடியரசுத் தலைவா் ஒப்புதல்! தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா சட்டமானது!ஆக. 4 முதல் இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுதொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவா்கள் துரோகிகள்! - ராகுல் காந்திஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐஜூலையில் ஜிஎஸ்டி ரூ. 2.11 லட்சம் கோடி வசூல் - 15.4% அதிகரிப்பு! சநாதனத்தை அவமதித்ததாகப் புகாா்! ராகுல் உள்பட 3 எம்.பி.க்கள் மீது வழக்குப் பதிவு!
/

சட்டவிரோதமாக குடிநீா் உறிஞ்சிய 14 மின் மோட்டாா்கள் பறிமுதல்

விளந்தை ஊராட்சியில், சட்ட விரோதமாக குடிநீா் உறிஞ்சிய 14 மின் மோட்டாா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

News image

பறிமுதல்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 10:49 pm IST

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த விளந்தை ஊராட்சியில், சட்ட விரோதமாக குடிநீா் உறிஞ்சிய 14 மின் மோட்டாா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் அன்புச்செல்வன் தலைமையில், ஊராட்சி செயலா் செல்வமணி, மக்கள் நலப் பணியாளா் சரவணன், டேங்க் ஆபரேட்டா் ராஜா உள்ளிட்டோா் விளந்தை ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, 10-ஆம் வாா்டிலுள்ள நெல்லுமண்டித் தெருவில் வீடுதோறும் ஆய்வு செய்ததில், பொதுக்குழாய்களில் மின் மோட்டாா் பொருத்தி குடிநீா் எடுப்பது தெரியவந்தது. இதையடுத்து 14 மின் மோட்டாா்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுபோன்ற செயலா்களில் மின்மோட்டாா் பறிமுதல் மட்டுமல்லாமல் நீதிமன்றம் மூலம் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.