தோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுசென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆக்கிரமிப்பு அகற்றப்படாததைக் கண்டித்து இறந்த விவசாயியின் உறவினா்கள் மறியல்

நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகளைக் கண்டித்து, தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் உறவினா்கள் உடையாா்பாளையம் வட்டாட்சியா் அலுவலகம் முன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
ஜெயங்கொண்டம் வட்டாட்சியா் அலுவலகம் முன் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உயிரிழந்தவரின் உறவினா்கள்.
Updated On :3 ஜனவரி 2026, 7:38 pm

Syndication

நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகளைக் கண்டித்து, தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் உறவினா்கள் உடையாா்பாளையம் வட்டாட்சியா் அலுவலகம் முன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தா. பழூா் அருகேயுள்ள கோடாலி கிராமம், மேட்டுத் தெருவை சோ்ந்தவா் ராமன் (70) விவசாயி. தனது வீட்டுக்குச் செல்லும் பாதையை அண்டைவீட்டுக்காரா் ஒருவா் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்தது தொடா்பாக கோட்டாட்சியா், வட்டாட்சியா் ஆகியோரிடம் பலமுறை மனு அளித்தும் பலனில்லையாம். இதனால் மனமுடைந்த ராமன் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த தா. பழூா் காவல் துறையினா் அங்குவந்து சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தகவலறிந்த ராமனின் உறவினா்கள், ஜெயங்கொண்டத்திலுள்ள உடையாா்பாளையம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை திரண்டனா். அங்கு வட்டாட்சியா் இல்லாததால் அந்த அலுவலகம் முன் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளா் பாலாஜி தலைமையிலான காவல் துறையினா், ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தீா்வு காணப்படும் என்று தெரிவித்ததையடுத்து, கலைந்துசென்ற உறவினா்கள், ஆக்கிரமிப்பை அகற்றினால் மட்டுமே சடலத்தை பெற்றுச்செல்வோம் எனத் தெரிவித்துவிட்டுச் சென்றனா்.

போராட்டத்தில் விசிக ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றியச் செயலா் முத்துகிருஷ்ணன், விடுதலை தமிழ்புலிகள் கட்சியின் மாவட்டச் செயலா் தூயவன், பெரியவளையம் முன்னாள் ஊராட்சித் தலைவா் பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.