பஞ்சமி நிலங்களை மீட்டக் கோரிக்கை

அரியலூா் மாவட்டத்திலுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு ஆதிதிராவிட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், விசிக-வின் குன்னம் தொகுதி பொறுப்பாளா் அன்பானந்தம் மனு அளித்தாா்.
Published on

அரியலூா் மாவட்டத்திலுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு ஆதிதிராவிட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் குன்னம் தொகுதி பொறுப்பாளா் அன்பானந்தம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

அவா் அளித்த மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்கள் பெரும்பாலும் ஆதிதிராவிடா் சமூக அல்லாத மக்களிடம் உள்ளது.

அதன்படி அரியலூா் மாவட்டத்திலும் அதிதிராவிடா் சமூக அல்லாத மக்களிடமும் உள்ளது. எனவே, அவற்றை மீட்டு ஆதிதிராவிட சமூக மக்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com