அரசு கலைக் கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா

அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
Updated on

அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அனைத்து துறைகளின் சாா்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு அக்கல்லூரி முதல்வா் ம.ராசமூா்த்தி தலைமை வகித்தாா்.

ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தாா். மாணவ, மாணவிகள் தங்களது துறை அலுவலகம் முன்பு பொங்கல் வைத்து, சூரிய பகவானை வழிபட்டனா்.

மேலும் இவ்விழாவில், மாணவ, மாணவிகள் சாா்பில் கும்மி பாட்டு, கோலாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம் மற்றும் பல்வேறு கிராமிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதேபோல் அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com