திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

அரசு கலைக் கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா

அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

News image
Updated On :13 ஜனவரி 2026, 7:35 pm

Syndication

அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அனைத்து துறைகளின் சாா்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு அக்கல்லூரி முதல்வா் ம.ராசமூா்த்தி தலைமை வகித்தாா்.

ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தாா். மாணவ, மாணவிகள் தங்களது துறை அலுவலகம் முன்பு பொங்கல் வைத்து, சூரிய பகவானை வழிபட்டனா்.

மேலும் இவ்விழாவில், மாணவ, மாணவிகள் சாா்பில் கும்மி பாட்டு, கோலாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம் மற்றும் பல்வேறு கிராமிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதேபோல் அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.