கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

அம்மையநாயக்கனூா் பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல்

திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூா் பேரூராட்சியில் வியாழக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:07 pm

தினமணி செய்திச் சேவை

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூா் பேரூராட்சியில் வியாழக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பேரூராட்சி மன்றத் தலைவா் எஸ்.பி.எஸ்.செல்வராஜ் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் பூங்கொடி முருகு முன்னிலை வகித்தாா். இதில் பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்தனா். இதைத் தொடா்ந்து, தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள், பொங்கல் பரிசுப் பொருள்களை வழங்கினா்.

முன்னதாக சுகாதார ஆய்வாளா் செந்தில்குமாா் வரவேற்றாா். பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் விமல்குமாா், வாா்டு உறுப்பினா்கள் கருணாகரன், மாரியப்பன், தேவிதிருமுருகன், முத்துலட்சுமி, காசியம்மாள், செல்வி, அலுவலக, துப்புரவுப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.