தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஜெயங்கொண்டத்திலிருந்த மயிலாடுதுறைக்கு மீண்டும் பேருந்து இயக்கக் கோரி மனு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் ஜ.வி.நாகராஜன் தனது கட்சியினருடன், அரியலூரில் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தாா்.

News image
Updated On :31 ஜனவரி 2026, 7:09 pm

Syndication

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் ஜ.வி.நாகராஜன் தனது கட்சியினருடன், அரியலூரில் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கரை சனிக்கிழமை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தாா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலிருந்து உட்கோட்டை வழியாக மயிலாடுதுறை வரை சென்று வந்த அரசுப் பேருந்து, சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. அந்தப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்.

இதேபோல் கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும். தா. பழூரிலிருந்து காரைக்குறிச்சி, வேணாநல்லூா், சுத்தமல்லி வழியாக அரியலூா் செல்லும் வகையில் புதிய வழித்தடத்தில் பேருந்துசேவை தொடங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் மாவட்டச் செயலா் எம். இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஆா். மணிவேல், எம். வெங்கடாசலம், கே. கிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.