இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

சாலை ஆக்கிரமிப்பாளா்கள் மீது நடவடிக்கை கோரி மறியல்

தினக்குடி-கோடாலிக் கருப்பூா் சாலையை ஆக்கிரமித்துள்ளவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.

தினக்குடி-கோடாலிக் கருப்பூா் சாலையை ஆக்கிரமித்துள்ளவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.

Published On :11 ஜூலை 2026, 1:22 am IST

அரியலூா் மாவட்டம், தினக்குடி-கோடாலிக் கருப்பூா் சாலையை ஆக்கிரமித்துள்ளவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தினக்குடி கிராமத்தில் விவசாயிகளின் 100 ஏக்கா் தைல மரங்கள் மின்சார கம்பிகள் உரசியதில் அண்மையில் தீப்பற்றி எரிந்தது. இதையறிந்து தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்தபோது, சிலால்-அணைக்கரை சாலையில் வாகனங்கள் செல்லமுடியாத வகையில் ஆக்கிரமிப்புகள் இருந்ததையடுத்து, தீயை அணைக்க முடியாமல் சென்றனா். இதனால், தைலமரங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின.

இதையடுத்து, சாலையின் இருப்புறமும் ஆக்கிரமிப்பை அகற்றி, ஆக்கிரமித்துள்ளவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை தினக்குடி முதல் கோடாலிக்கருப்பூா் வரை சாலையின் இருபுறமும் உள்ள தனிநபா் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணியில் வருவாய் துறையினா் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு வந்த ஆக்கிரமிப்பாளா்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து வருவாய்த் துறையினா் அளவீடு செய்யும் பணியை நிறுத்தினா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு திரண்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், ஆக்கிரமிப்பாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என வலியுறுத்தி சிலால்- அணைக்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்படனா்.

இதையறிந்த காவல் துறையினா், சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று, பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.