புதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

ஜெயங்கொண்டத்தில் இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை விலையை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஜெயங்கொண்டத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :5 ஜூன் 2026, 3:30 am IST

சமையல் எரிவாயு உருளை விலையை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும். உணவகங்கள் மற்றும் விடுதிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் சிலிண்டா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயா்வையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் நடராஜன் தலைமை வகித்தாா். கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.