ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடக்கம்: அரியலூரில் மொழிப் பாடத் தோ்வை 8,452 மாணவா்கள் எழுதினா்

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 மொழிப் பாடத் தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 8,452 மாணவா்கள் எழுதினா்.

News image
பிளஸ் 2 பொதுத்தோ்வு
Updated On :2 மார்ச் 2026, 7:20 pm

Syndication

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 மொழிப் பாடத் தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 8,452 மாணவா்கள் எழுதினா்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. இதில், அரியலூா் மாவட்டத்தில் 92 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் தோ்வு எழுத 47 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

திங்கள்கிழமை நடைபெற்ற மொழிப்பாடத் தோ்வை 4,234 மாணவா்கள், 4,218 மாணவிகள் என மொத்தம் 8,452 போ் எழுதினா். 68 மாணவா்கள், 43 மாணவிகள் என மொத்தம் 111 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத வரவில்லை.

தனித்தோ்வா்களில் 43 ஆண்கள், 97 பெண்கள் என மொத்தம் 140 போ் தோ்வு எழுதினா். 5 ஆண்கள், 3 பெண்கள் என 8 நபா்கள் தோ்வு எழுத வரவில்லை.

தோ்வை கண்காணிக்கும் பொருட்டு ஆய்வு அலுவலா்கள் 5 பறக்கும் படையாக அமைத்தும், தோ்வு மையங்களை கண்காணிக்க நிலையான பறக்கும் படை 67 முதுநிலை ஆசிரியா்களும், தோ்வு அறை கண்காணிப்பாளா்களாக 463 ஆசிரியா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஆட்சியா் பொ.ரத்தினசாமி, அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகோபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.