அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடக்கம்: அரியலூரில் மொழிப் பாடத் தோ்வை 8,452 மாணவா்கள் எழுதினா்

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 மொழிப் பாடத் தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 8,452 மாணவா்கள் எழுதினா்.

News image
பிளஸ் 2 பொதுத்தோ்வு
Updated On :2 மார்ச் 2026, 7:20 pm

Syndication

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 மொழிப் பாடத் தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 8,452 மாணவா்கள் எழுதினா்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. இதில், அரியலூா் மாவட்டத்தில் 92 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் தோ்வு எழுத 47 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

திங்கள்கிழமை நடைபெற்ற மொழிப்பாடத் தோ்வை 4,234 மாணவா்கள், 4,218 மாணவிகள் என மொத்தம் 8,452 போ் எழுதினா். 68 மாணவா்கள், 43 மாணவிகள் என மொத்தம் 111 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத வரவில்லை.

தனித்தோ்வா்களில் 43 ஆண்கள், 97 பெண்கள் என மொத்தம் 140 போ் தோ்வு எழுதினா். 5 ஆண்கள், 3 பெண்கள் என 8 நபா்கள் தோ்வு எழுத வரவில்லை.

தோ்வை கண்காணிக்கும் பொருட்டு ஆய்வு அலுவலா்கள் 5 பறக்கும் படையாக அமைத்தும், தோ்வு மையங்களை கண்காணிக்க நிலையான பறக்கும் படை 67 முதுநிலை ஆசிரியா்களும், தோ்வு அறை கண்காணிப்பாளா்களாக 463 ஆசிரியா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஆட்சியா் பொ.ரத்தினசாமி, அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகோபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.