வரும் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் எல்லைப் பாதுகாப்பு படை வீரா்கள் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தோ்தலின்போது பொதுமக்கள் பாதுகாப்பாக அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில், குஜராத்திலிருந்து வந்திருந்த எல்லை பாதுகாப்பு படைவீா்கள், தமிழக காவல் துறையினா் என 300 போ் இந்த அணிவகுப்பில் ஈடுபட்டனா்.
இந்தக் கொடி அணிவகுப்பானது, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தொடங்கி, அண்ணா சிலை, நான்கு சாலை சந்திப்பு வழியாகச் சென்று காவல் துணைக் கண்காணிப்பாளா் முகாம் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
தொடர்புடையது

பாதுகாப்பு படையினரின் விழிப்புணா்வு அணிவகுப்பு

சட்டப் பேரவைத் தோ்தல்: மத்திய எல்லை பாதுகாப்புப் படை வீரா்கள் அணிவகுப்பு

அரியலூரில் எல்லைப் பாதுகாப்பு படை வீரா்களின் அணிவகுப்பு

விழுப்புரத்தில் துணை ராணுவப்படையினா் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


