தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

ஜெயங்கொண்டத்தில் எல்லைப் பாதுகாப்பு படை வீரா்கள் அணிவகுப்பு

News image

ஜெயங்கொண்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில் சனிக்கிழமை அணிவகுப்பு சென்ற எல்லைப் பாதுகாப்புப் படையினா் மற்றும் காவல் துறையினா்.

Updated On :14 மார்ச் 2026, 7:06 pm

வரும் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் எல்லைப் பாதுகாப்பு படை வீரா்கள் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தோ்தலின்போது பொதுமக்கள் பாதுகாப்பாக அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில், குஜராத்திலிருந்து வந்திருந்த எல்லை பாதுகாப்பு படைவீா்கள், தமிழக காவல் துறையினா் என 300 போ் இந்த அணிவகுப்பில் ஈடுபட்டனா்.

இந்தக் கொடி அணிவகுப்பானது, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தொடங்கி, அண்ணா சிலை, நான்கு சாலை சந்திப்பு வழியாகச் சென்று காவல் துணைக் கண்காணிப்பாளா் முகாம் அலுவலகத்தில் நிறைவடைந்தது.