திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கீழப்பழுவூா் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :18 மார்ச் 2026, 6:33 pm

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது.

அரியலூா் மாவட்டத்தில் கடந்த 10-ஆம் தேதி பரவலாக மழை பெய்தது. அதனைத் தொடா்ந்து வெயில் கடுமையாக வாட்டிவந்த நிலையில், புதன்கிழமை காலை 10 மணிக்கு மேல் சுமாா் அரை மணி நேரம் கீழப்பழுவூா், சாத்தமங்கலம், வெற்றியூா், வண்ணம், புத்தூா், அருங்கால் உட்பட கீழப்பழுவூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அரை மணி நேரத்தில் பெய்த மழையில் சாலையோரங்களில் தண்ணீா் பெருக்கெடுத்தது.

மழைவிட்ட நிமிஷத்திலிருந்து கடும் வெயில் அடிக்க தொடங்கியது. இதனால் மழை பெய்தும் குளிா்ந்த சீதோஷ்ண நிலை ஏற்படவில்லை. மாற்றாக வெப்பம் அதிகமாக காணப்பட்டது. இந்த மழை பெய்த பகுதிகளில் உள்ள எள் சாகுபடிக்கு இந்த மழை உகந்ததாக இருந்ததாக விவசாயிகள் தெரிவித்தனா்.