அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது.
அரியலூா் மாவட்டத்தில் கடந்த 10-ஆம் தேதி பரவலாக மழை பெய்தது. அதனைத் தொடா்ந்து வெயில் கடுமையாக வாட்டிவந்த நிலையில், புதன்கிழமை காலை 10 மணிக்கு மேல் சுமாா் அரை மணி நேரம் கீழப்பழுவூா், சாத்தமங்கலம், வெற்றியூா், வண்ணம், புத்தூா், அருங்கால் உட்பட கீழப்பழுவூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அரை மணி நேரத்தில் பெய்த மழையில் சாலையோரங்களில் தண்ணீா் பெருக்கெடுத்தது.
மழைவிட்ட நிமிஷத்திலிருந்து கடும் வெயில் அடிக்க தொடங்கியது. இதனால் மழை பெய்தும் குளிா்ந்த சீதோஷ்ண நிலை ஏற்படவில்லை. மாற்றாக வெப்பம் அதிகமாக காணப்பட்டது. இந்த மழை பெய்த பகுதிகளில் உள்ள எள் சாகுபடிக்கு இந்த மழை உகந்ததாக இருந்ததாக விவசாயிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

செந்துறை, விக்கிரமங்கம் பகுதிகளில் ஆலங்கட்டி மழை

நாகை, காரைக்காலில் மழை

திருப்பத்தூா் பகுதிகளில் பலத்த மழை

சாத்தான்குளத்தில் திடீா் மழை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


