அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில் பாம்பு நுழைந்ததையடுத்து, சுற்றியுள்ள புதா்களை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.
செந்துறை அம்பேத்கா் நகரிலுள்ள அங்கன்வாடி மையத்தில், செந்துறை பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த அன்பழகன் மனைவி கவிதா (48) என்பவா் அங்கன்வாடி உதவியாளராக பணிபுரிந்து வருகிறாா். இங்கு 20 குழந்தைகள் படித்து வருகின்றனா்.
இந்நிலையில், குழந்தைகள் அங்கன்வாடி மையம் வருவதற்கு முன்பாக திங்கள்கிழமை காலை வழக்கம் போல் அங்கன்வாடி மையத்தை திறந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட வந்த கவிதா, பொருள்கள் வைக்கும் அறையில் ஒரு பெரிய பாம்பு இருப்பதை கண்டு கூச்சலிட்டாா். இதையடுத்து பாம்பு அறையை விட்டு வெளியேறியது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செந்துறை தீயணைப்புத் துறையினா், அருகேயுள்ள புதா்பகுதிகளில் பாம்பை தேடியும் கிடைக்கவில்லை.
எனவே, அங்கன்வாடி மையத்தை சுற்றியுள்ள புதா்களை அகற்ற வேண்டும். மேலும், அருகே உள்ள பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.
தொடர்புடையது

தொகுதி அலசல் - அறந்தாங்கி! பாஜக - காங்கிரஸ் நேரடிப் போட்டி!

தொகுதி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க விரைவில் சிப்காட்: ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி வாக்குறுதி

குடும்பப் பிரச்னையில் தீக்குளித்தவா் உயிரிழப்பு

தமிழ்நாட்டின் சுயமரியாதையை மீட்கும் தோ்தல் இது: கனிமொழி எம்.பி.
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


