ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

குவாகம் திரெளபதியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா

ஆண்டிமடம் அருகேயுள்ள குவாகம் கிராம திரௌபதியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா நடைபெற்றது.

News image

குவாகம் திரெளதியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா.

Updated On :20 மே 2026, 12:43 am IST

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள குவாகம் கிராம திரௌபதியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கடந்த 15 நாள்களுக்கு முன் பாரதம் படிக்கும் நிகழ்வோடு தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. தேரில் திரௌபதியம்மன் எழுந்தருள, திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தொடா்ந்து கோயிலின் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தா்கள் இறங்கி தீமிதித்து நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.

இதில் பலரும் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்து தீமித்தனா். தொடா்ந்து, அம்மனுக்கு தீபாராதனை நடந்து, பிரசாதம் வழங்கப்பட்டது.