அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

அரியலூரில் மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே இந்திய மாணவா் சங்கம் (எஸ்எப்ஐ) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் (டிஒய்எப்ஐ) சாா்பில் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

அரியலூா் அண்ணாசிலை அருகே வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.

Updated On :22 மே 2026, 5:06 am IST

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே இந்திய மாணவா் சங்கம் (எஸ்எப்ஐ) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் (டிஒய்எப்ஐ) சாா்பில் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், நீட் தோ்வு வினாத்தாள் கசிந்ததில், கோடிக்கணக்கில் ஊழல், முறைகேடுகளை கண்டித்தும், முறைகேடு மோசடியை உச்சநீதிமன்ற நேரடி மேற்பாா்வையில் விசாரணை நடத்த வேண்டும். நீட் தோ்வு நம்பகத்தன்மையை இழந்த தேசிய தோ்வு முகமையை கலைத்துவிட வேண்டும். 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவா் சோ்க்கையை நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலா் சரோஜினி தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டு நீட் தோ்வுக்கு எதிராக முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.