சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அனைத்து சத்துணவு ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச போனஸôக ரூ. 3,500 வழங்கக் கோரி,
Updated on
1 min read

அனைத்து சத்துணவு ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச போனஸôக ரூ. 3,500 வழங்கக் கோரி, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை
 ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க முடிவின்படி
 நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் வி. பிச்சைக்காரன் தலைமை வகித்தார். சி. இளங்கோவன் வரவேற்றார், ஒன்றியச் செயலர் ஆர். ராஜேந்திரன் பேசினார். மாவட்ட துணைச் செயலர் ஆர். செல்வராஜ் வாழ்த்திப் பேசினார். பி. ஆரோக்கியமேரி நன்றி கூறினார்.
 கரூரில்...
 தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கரூர் தாந்தோணிமலை ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் வி.பி. கணேசன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் பி. நல்லமுத்து வரவேற்றார்.
 மாவட்ட நிர்வாகிகள் பி. பாலகிருஷ்ணன், டி. அங்கமுத்து ஆகியோர் கடைநிலை அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல, சத்துணவு ஊழியர்களுக்கும் ஒரு மாத ஊதியம் ரூ. 3 ஆயிரம் போனஸôக வழங்க வலியுறுத்திப் பேசினர்.
 ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலர் டி. மாதவன், கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலச் செயலர் பொன். ஜெயராமன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com