பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

கரூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் ஆட்சியர் தலைமையில் அண்மையில்(டிச. 26) நடைபெற்றது. 

News image
Updated On :28 டிசம்பர் 2017, 11:06 pm

DIN

கரூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் ஆட்சியர் தலைமையில் அண்மையில்(டிச. 26) நடைபெற்றது. 
முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் தலைமை வகித்து மேலும் பேசியது:  
கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் மாற்று திறனாளிகளுக்கான  சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை (டிச. 29) கிருஷ்ண ராயபுரம், ஜனவரி 3 இல் தாந்தோன்றிமலை, ஜனவரி 5 ஆம் தேதி கடவூர், 10 ஆம் தேதி அரவக்குறிச்சி,12 ஆம் தேதி தோகைமலை, 19  ஆம் தேதி க. பரமத்தி மற்றும் 24 ஆம் தேதி கிருஷ்ணராய புரத்திலும் ந டைபெற உள்ளது என்றார். முகாமில், மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ், 5 மாற்று திறனாளிகளுக்கு தலா 50 ஆயிரம் மதிப்பில் மொத்தம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான காசோலைகள் வழங்கினார். 
முகாமில், கூட்டுறவு சார் பதிவாளர் சீனிவாசன், கரூர் கோட்டாட்சியர் கு.சரவண மூர்த்தி, மாற்று திறனாளி நலத்துறை அலுவலர் காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.