வெண்மணி தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு கரூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை தெருமுனை பிரசாரம் மேற்கொண்டனர்.
கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற பிரசாரத்துக்கு சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலர் எம். தண்டபாணி தலைமை வகித்தார்.
கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலர் டி. குமார், சிஐடியு மாவட்டச் செயலர் சி. முருகேசன், மாவட்ட நிர்வாகிகள் கா. கந்தசாமி, ராஜாமுகமது, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில்1968-ம் ஆண்டு டிச.25-ல் கீழவெண்மணியில் 44 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், வரும் ஜன.8,9-களில் நடைபெற உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தம் குறித்தும் விளக்க உரையாற்றினர். இதில் தொழிற்சங்கத்தினர் திரளாக பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








