மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அனுமதியின்றி மது விற்ற 5 பேர் கைது

குளித்தலை சுற்று வட்டாரப் பகுதிகளில் அனுமதியின்றி மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 2:45 am

DIN

குளித்தலை சுற்று வட்டாரப் பகுதிகளில் அனுமதியின்றி மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
குளித்தலை சுற்று வட்டாரப் பகுதிகளில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்கப்படுவதாக வந்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில்  மது விற்ற குமாரமங்கலம் தங்கதுரை (41), இரணியமங்கலம் வளையப்பட்டி  சேகர் (60), வையாபுரி (65), சிவாயம் ஈச்சம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் (35), வைகைநல்லூர் கீழக்குட்டப்பட்டி கணேசன் (60) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.