மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேகம்

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே பசுபதிபாளையத்தில் உள்ள மதுரைவீரன் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழ

Updated On :14 மே 2018, 10:48 pm

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே பசுபதிபாளையத்தில் உள்ள மதுரைவீரன் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
முன்னதாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சனிக்கிழமை (மே 12) காலை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் காவிரி ஆற்றிற்குச் சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்கள் எடுத்து வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
பின்னர் கோயிலில் மாலை 5 மணிக்குமேல் மஹா கணபதி வழிபாடு, பஞ்சகவ்யம், வாஸ்து சாந்தி, மிருத்சங் கிரகணம், அங்குரார்ப்பணம், ரக்ஷô பந்தனம், கடம், யாக சாலை, பிரவேசம், துவார பூஜை, வேதிகார்ச்சனை நடைபெற்றது.
தொடர்ந்து முதல் கால யாக பூஜை, தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மேல் மங்கள இசையுடன் 4 ஆம் கால யாக பூஜையும், யாக சாலையில் இருந்து ஆலய பிரவேசம், 8 மணிக்கு மேல் மதுரை வீரன் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர்ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.