கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே பசுபதிபாளையத்தில் உள்ள மதுரைவீரன் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
முன்னதாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சனிக்கிழமை (மே 12) காலை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் காவிரி ஆற்றிற்குச் சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்கள் எடுத்து வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
பின்னர் கோயிலில் மாலை 5 மணிக்குமேல் மஹா கணபதி வழிபாடு, பஞ்சகவ்யம், வாஸ்து சாந்தி, மிருத்சங் கிரகணம், அங்குரார்ப்பணம், ரக்ஷô பந்தனம், கடம், யாக சாலை, பிரவேசம், துவார பூஜை, வேதிகார்ச்சனை நடைபெற்றது.
தொடர்ந்து முதல் கால யாக பூஜை, தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மேல் மங்கள இசையுடன் 4 ஆம் கால யாக பூஜையும், யாக சாலையில் இருந்து ஆலய பிரவேசம், 8 மணிக்கு மேல் மதுரை வீரன் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர்ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார் முதல்வர், துணை முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

வாய்ப்புண் எதனால் ஏற்படுகிறது? என்ன செய்ய வேண்டும்?

தொகுதி மறுசீரமைப்பு ஜனநாயகத்திற்கு எதிரான மறைமுக தாக்குதல்: செல்வப்பெருந்தகை
கர கதையிலேயே நாயகத் தன்மை உண்டு: தனுஷ்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

