கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே ஆடுகள் ஏற்றி வந்த வேன் மீது தனியார் பேருந்து மோதியதில் 16 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. மேலும் விபத்தில் ஆட்டு வியாபாரிகள் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர் குட்டிராஜ் (43). ஆட்டு வியாபாரி. இவர், கயத்தாறு ஆத்திக்குளத்தைச் சேர்ந்த வெயில்முத்து மகன் சுடலை (25), கோவில்பட்டி மந்தித்தோப்பு அய்யனார் மகன் மணிவண்ணன்(22) ஆகியோருடன் வேனில் சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு சனிக்கிழமை காலை சென்று அங்கு 70 ஆடுகள் வாங்கிக் கொண்டு கோவில்பட்டி திரும்பியுள்ளார். வேனை சுடலை ஓட்டியுள்ளார். இந்நிலையில், இரவு 10 மணியளவில் அரவக்குறிச்சியை அடுத்த மலைக்கோவிலூர் என்ற இடத்தில் வந்தபோது, எதிரே வந்த தனியார் பேருந்து வேன் மீது மோதியுள்ளது. இதில், வேனுக்குள் இருந்த 70 ஆடுகளில் 16 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன. மேலும், வேன் ஓட்டுநர் சுடலை உள்ளிட்ட மூவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மலைக்கோவிலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிந்து பேருந்து ஓட்டுநர் கன்னியாகுமரி மாவட்டம் மணியன்குழி பகுதியைச் சேர்ந்த செபாஸ்டியன்(46) என்பவரைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் - அமெரிக்கா அமைதிப்பேச்சு! சௌதி, கத்தார், துருக்கி செல்கிறார் பாக். பிரதமர்!

ரூ. 8,000 கூப்பன் மாதிரிகளை வழங்கினால் நடவடிக்கை: தேர்தல் ஆணையம்

நூர் அகமதுடன் நீண்ட நேரம் உரையாடிய தோனி..! ரகசியம் பகிர்ந்த பயிற்சியாளர்!

ராஜன் வகையறாவில் கவனம் செலுத்தும் வெற்றி மாறன்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

