கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் புகழிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கோயிலில் தைப்பூசத் தேர்த் திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கட்டளைதாரர்கள் மண்டகப்படியும், ஜன.20 ஆம் தேதி திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.
தைப்பூசத் தினமான திங்கள்கிழமை காலை முதல் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
காலை முதல் பக்தர்கள் பல்வேறு காவடி எடுத்து வந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர் .
மாலை 5 மணிக்கு வள்ளி, தெய்வசேனா சமேத பாலசுப்ரமணிய சுவாமி எழுந்தளிய பின்னர் தேர் வடம்பிடிக்கப்பட்டது.
காந்தி நகர் வரை தேரை இழுத்த பக்தர்கள் பின்னர் நிறுத்திச் சென்றனர். இதைத் தொடர்ந்து, இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை மாலை மறுதேர் இழுத்தல் நடந்தது. ஏராளமான பக்தர்கல் கந்தம்பாளையம் வழியாக தேர் வடம்பிடித்து இழுத்து சென்று மலையடிவாரத்தில் மீண்டும் தேர்நிலையில் நிறுத்தினர்.
கோயில் செயல் அலுவலர் சுரேஷ், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், துணைக் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன், பேரூராட்சி செயல்அலுவலர்கள் புஞ்சை புகழூர் சத்தியமூர்த்தி, காகிதபுரம் வெங்கடேசன், தோட்டக்குறிச்சி பாலசுப்ரமணியன், காகிதபுரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் கமலக்கண்ணன், பேரூர் செயலர்கள் புஞ்சை புகழூர் சரவணன், காகிதபுரம் சதாசிவம், தோட்டக்குறிச்சி அன்பழகன், முன்னாள் மாவட்டக் கூட்டுறவு அச்சக தலைவர் விவேகானந்தன் உள்ளிட்டோர் தேரோட்டத்தில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் நிகழாண்டில் இதுவரை தீ விபத்துகளில் 45 போ் உயிரிழப்பு: புள்ளிவிவரத் தரவுகள்

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டம் ரத்து: ஏடிஜிபி அருணுக்கு உயா் நீதிமன்றம் கண்டனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவர் தகவல்

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


