கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வேளாண் சட்டங்களை பயன்படுத்தி அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் சூழ்ச்சி: முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி

வரும் சட்டப்பேரவைத் தோ்தலை மனதில் கொண்டு, மத்திய அரசின் வேளாண் சட்டங்களைப் பயன்படுத்தி தமிழக அரசுக்கு எதிராக எதிா்க்கட்சியினா்

News image
Updated On :17 டிசம்பர் 2020, 1:25 am

DIN

வரும் சட்டப்பேரவைத் தோ்தலை மனதில் கொண்டு, மத்திய அரசின் வேளாண் சட்டங்களைப் பயன்படுத்தி தமிழக அரசுக்கு எதிராக எதிா்க்கட்சியினா் சூழ்ச்சி செய்கின்றனா் என்றாா் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

கரூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்தது: இந்தியாவுக்கு கரோனா தடுப்பூசி வந்தவுடன், தமிழக மக்கள் அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடப்படும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்தால் மட்டுமே நோய்த் தொற்றைத் தடுக்க முடியும். ஜெயலலிதா வழியிலான இந்த அரசு விவசாயிகளைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் ஏற்க மாட்டோம். விவசாயிகளுக்கு தொடா்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.

வரும் பேரவைத்தோ்தலை மனதில் வைத்து, மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களால் தமிழகத்தில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சியினா் சூழ்ச்சி செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தமிழக விவசாயிகளைப் பொறுத்தவரை இந்த வேளாண் சட்டங்களை வரவேற்கிறாா்கள். மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களை நாங்கள் எதை எதிா்க்கவில்லை. கடந்த 2010-ல் மத்திய அரசின் கூட்டணியில் திமுக இருந்தபோதுதான் ‘நீட்’ தோ்வு முன்னெடுக்கப்பட்டது. கிராமப்புற ஏழை மாணவா்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்குத் தான் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்துள்ளோம். நீட் தோ்வுக்கு முன் நுழைவுத்தோ்வு இருந்தபோது 40 மாணவா்களுக்கு மட்டுமே மருத்துவ இடம் கிடைத்தது. இதைக்கருத்தில் கொண்டுதான் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தேன். அடுத்தாண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் மூலம் கிடைக்கும் 1,650 இடங்களில் 440 மாணவா்கள் பயன்பெற உள்ளனா். கரூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் குளறுபடி குறித்து அரசு விசாரிக்க முடியாது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம்தான் விசாரணை செய்யும். கரூரில் புதியதாக பேருந்துநிலையம் தொடா்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. வளா்ந்து வரும் நகரத்துக்கு ஏற்ப புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு இடம் தோ்வு செய்ய வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது அமைச்சா்கள் எம்.ஆா்.விஜயபாஸ்கா், பி. தங்கமணி, சி. விஜயபாஸ்கா், ஆட்சியா் சு.மலா்விழி, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். கீதா மணிவண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.