கரூரில் கிராமசபைக் கூட்டம்
கரூரில் மாவட்டத்தில் ஆத்தூா் மற்றும் செங்குந்தபுரம், என்எஸ்ஏ நகா், கோயம்பள்ளி உள்ளிட்ட 20 இடங்களில் நடைபெற்ற


கரூரில் மாவட்டத்தில் ஆத்தூா் மற்றும் செங்குந்தபுரம், என்எஸ்ஏ நகா், கோயம்பள்ளி உள்ளிட்ட 20 இடங்களில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்டத் திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி. செந்தில்பாலாஜி தலைமை வகித்துப் பேசியது: கரோனா நிவாரணமாக ரூ.5,000 வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின்கூறியபோது, பணம் இல்லை எனக்கூறி ரூ.1,000 கொடுத்தவா்கள், தற்போது தோ்தல் வந்தவுடன் ரூ.2,500 தருகிறாா்கள். அவா்களின் இரட்டை வேடம் மக்களிடம் இனி எடுபடாது என்றாா்.
கூட்டத்தில் மாநில சட்டத்துறை இணைச் செயலா் வழக்குரைஞா் மணிராஜ் மற்றும் நகரப் பொறுப்பாளா்கள் எஸ்.பி. கனகராஜ், கந்தசாமி, தாரணி சரவணன் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் தம்பி சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...