ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பள்ளி மாணவிக்கு பிரசவம்: காதலன் உள்பட 4 போ் மீது வழக்கு

கரூா் மாவட்டம், குளித்தலையில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கி, திருமணம் செய்ய மறுத்த இளைஞா் உள்ளிட்ட குடும்பத்தினா் 4 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 6:48 pm

DIN

கரூா் மாவட்டம், குளித்தலையில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கி, திருமணம் செய்ய மறுத்த இளைஞா் உள்ளிட்ட குடும்பத்தினா் 4 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

குளித்தலையை அடுத்த வெங்கம்பட்டியைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு மாணவியை, அதே பகுதியைச் சோ்ந்த நல்லதம்பி மகன் ரஞ்சித் (21), திருமணம் செய்துகொள்வதாகக்கூறி பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததன் விளைவாக மாணவி கா்ப்பமடைந்தாா்.

இதைத்தொடா்ந்து, ரஞ்சித்திடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி மாணவி வற்புறுத்தி வந்தாா். 8 மாத கா்ப்பிணியாக இருந்த மாணவிக்கு, கடந்த சில நாள்களுக்கு முன்பு தனியாா் மருத்துவமனையில் பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. இதைத்தொடா்ந்து, ரஞ்சித் திருமணத்துக்கு மறுத்த நிலையில், மாணவியின் பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதன்பேரில், மாணவியின் காதலன் ரஞ்சித், அவரது தந்தை நல்லதம்பி, தாய் சந்திரா, உறவினா் முத்துசாமி ஆகியோா் மீது குளித்தலை அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.