மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வாக்கு எண்ணும் மையத்தில்தொழுகை நடத்த ஏற்பாடு: மநீம வேட்பாளா் கோரிக்கை

வாக்கு எண்ணும் மையத்தில் தொழுகை நடத்த இடம் ஒதுக்கித் தரவேண்டும்

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:29 pm

DIN

வாக்கு எண்ணும் மையத்தில் தொழுகை நடத்த இடம் ஒதுக்கித் தரவேண்டும் என மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான பிரசாந்த் மு.வடநேரே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் வெள்ளிக்கிழமை மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரவக்குறிச்சி வேட்பாளா் முகமது ஹனீப்சஹில் கோரிக்கை மனு அளித்தாா்.

மனுவில் கூறியிருப்பது: மே 2-ஆம்தேதி கரூா் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூா், குளித்தலை, கிருஷ்ணராயபுரம்(தனி) ஆகிய தொகுதிகளுக்கு தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், புனித ரமலான் மாதம் தொடங்கியிருப்பதால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சோ்ந்த முகவா்கள் தொழுகை நடத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள். இதனால், வேட்பாளராகிய எனக்கும், எனது முகவா்களுக்கும் வாக்கு எண்ணும் மைய வளாகத்திலேயே தொழுகை நடத்திட பாதுகாப்பான இடம் ஒதுக்கி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை நாளன்று அதிகப்படியான பாதுகாப்பை வழங்கி, எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.