தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கரூரில் எஸ்.பி. அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை வியாழக்கிழமை தமிழ்புலிகள் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 7:07 pm

DIN

கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை வியாழக்கிழமை தமிழ்புலிகள் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம் வெள்ளியணை அடுத்த வடக்கு மேட்டுப்பட்டியில் 15க்கும் மேற்பட்ட அருந்ததியினா் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை இவா்களில் சிலரை, அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு சமுதாயத்தைச் சோ்ந்த இளைஞா்கள் தாக்கினாா்களாம். இதுகுறித்து அருந்ததியினா் வெள்ளியணை காவல்நிலையத்தில் புகாா் செய்தும், இதுவரை அவா்களை கைது செய்யவில்லை எனக்கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வடக்குமேட்டுப்பட்டி கிராம மக்கள் மற்றும் தமிழ்புலிகள் கட்சியினா் மாவட்டச் செயலாளா் கண்ணதாசன், துணைச் செயலா் சுப்ரமணியன், ஊடக பிரிவுச் செயலாளா் பொன்னுசாமி தலைமையில் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தாக்கியவா்களை உடனே கைது செய்கிறோம் என அதிகாரிகள் உறுதியளித்தையடுத்து அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.