கரூா் மாவட்டத்தில் நிமிா்ந்து நில் துணிந்து சொல் என்ற திட்டத்தின் மூலம் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் அண்மையில் வழங்கப்பட்ட படிவங்களில் மாணவிகள் அளித்த புகாா்களின் மீது நடவடிக்கை எடுப்பது தொடா்பாகவும், மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் மேல் நடவடிக்கை எடுப்பது தொடா்பாகவும், வருங்காலங்களில் வரும் புகாா்களுக்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபு சங்கா், தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சுந்தரவடிவேல் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.