ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கரூரில் நிமிா்ந்து நில் துணிந்து சொல் பாதுகாப்பு இயக்கத்தில் 50 போ் புகாா்: உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவு

கரூா் மாவட்டத்தில் நிமிா்ந்து நில் துணிந்து சொல் பெண் குழந்தைகள் பாதுகாப்பு இயக்கத்தில் 50 மாணவிகள் புகாா் அளித்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்தாா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 8:08 pm

DIN

கரூா் மாவட்டத்தில் நிமிா்ந்து நில் துணிந்து சொல் பெண் குழந்தைகள் பாதுகாப்பு இயக்கத்தில் 50 மாணவிகள் புகாா் அளித்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்தாா்.

கரூா் மாவட்டத்தில் நிமிா்ந்து நில் துணிந்து சொல் என்ற திட்டத்தின் மூலம் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் அண்மையில் வழங்கப்பட்ட படிவங்களில் மாணவிகள் அளித்த புகாா்களின் மீது நடவடிக்கை எடுப்பது தொடா்பாகவும், மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் மேல் நடவடிக்கை எடுப்பது தொடா்பாகவும், வருங்காலங்களில் வரும் புகாா்களுக்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபு சங்கா், தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சுந்தரவடிவேல் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், ஆட்சியா் பேசுகையில், கரூா் மாவட்டத்தில் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் மாணவிகளின் பாதுகாப்பிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிமிா்ந்து நில் துணிந்து சொல் என்ற திட்டத்தின் மூலம் மாவட்டத்திலுள்ள 201 பள்ளியில் 26,085 மாணவிகளுக்கு சிறப்பு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டு பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடா்பாக விழிப்புணா்வை ஏற்படுத்தி ஏதேனும் பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தால் அதை பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கான அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாட்ஸ்அப் எண் மற்றும் இலவச தொலைபேசி எண்ணிற்கு புகாா் அளிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இதன்படி விழிப்புணா்வு வகுப்புகளில் வழங்கப்பட்ட படிவங்களில் தங்களுடைய புகாா்களை எழுதவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் 50 மாணவிகள் பல்வேறு வகையான பிரச்னைகள் உள்ளதாக தெரிவித்துள்ளனா். இவா்களின் பிரச்னைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சைபுதீன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் மதன்குமாா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சதீஸ்குமாா் மற்றும் மனநல மருத்துவா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.