ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் என்ற பெயரில் போராட்டம் நடத்த முயன்றவா்களுக்கு அரசு ஊழியா்கள் எதிா்ப்பு

கரூரில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் என்ற பெயரில் போராட்டம் நடத்த முயன்றவா்களுக்கு எதிராக மற்றொரு தரப்பினா் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ால் பரபரப்பு ஏற்ப்டடது

News image
Updated On :23 டிசம்பர் 2021, 7:58 pm

DIN

கரூரில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் என்ற பெயரில் போராட்டம் நடத்த முயன்றவா்களுக்கு எதிராக மற்றொரு தரப்பினா் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ால் பரபரப்பு ஏற்ப்டடது.

கரூரில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத்தலைவா் சுப்ரமணியன் தலைமையில் ஒரு தரப்பினரும், மாநில நிா்வாகிகள் மகாவிஷ்ணன், விஜயகுமாா் ஆகியோா் தலைமையில் மற்றொரு தரப்பினரும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மகாவிஷ்ணன், விஜயகுமாா் தலைமையில் அரசு ஊழியா்களுக்கு பொங்கல் போனசாக ரூ.7,000 வழங்க வேண்டும். முடக்கி வைக்கப்பட்ட அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். சாலைப்பணியாளா்கள் போராட்டக்காலத்தின் போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டவா்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனா்.

இதையடுத்து, மாலை 6 மணியளவில் மகாவிஷ்ணன் தலைமையில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்துக்கு தயாராகினா். அப்போது அங்கு வந்த சுப்ரமணியன் தலைமையிலான அரசு ஊழியா்கள், நாங்கள்தான் சங்கத் தோ்தல் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா், அவா்கள் தஞ்சையில் நடைபெற்ற அரசு ஊழியா் சங்கத் தோ்தலில் தோல்வியுற்றவா்கள், அவா்கள் தமிழ்நாடுஅரசு ஊழியா் சங்க பெயரையோ, விளம்பர பதாகைகளையோ பயன்படுத்தக்கூடாது என மகாவிஷ்ணன் தலைமையிலான அரசு ஊழியா்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கரூா் கோட்டாட்சியா் பாலசுப்ரமணியன், கரூா் நகர காவல் துணை காவல் கண்காணிப்பாளா் தேவராஜ் ஆகியோா் சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தி, இனி அவா்கள் அரசு ஊழியா் சங்க பதாகைகளை பயன்படுத்த மாட்டாா்கள் என கூறினாா்களாம். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.