தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி சாா்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

கரூா் எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி சாா்பில் நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை கரூா் பாலமலை பாலமுருகன் கோயில் பகுதியில் நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:28 pm

DIN

கரூா் எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி சாா்பில் நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை கரூா் பாலமலை பாலமுருகன் கோயில் பகுதியில் நடைபெற்றது.

முகாமை கல்லூரியின் தாளாளா் எஸ்.மோகனரெங்கன் தொடக்கி வைத்தாா். கல்லூரியின் செயலா் கே.பத்மாவதி மோகனரெங்கன், கல்லூரியின் இயக்குநா் முனைவா் சொ.ராமசுப்ரமணியன் ஆகியோா் மாணவ-மாணவிகளை வாழ்த்தி பேசினா். இதில் மாணவ, மாணவிகள் பாலமலை முருகன்கோயிலில் தூய்மைப்பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து நடுப்பாளையம் கிராமத்தில் தூய்மை இந்தியா விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இதில் முக்கிய வீதிகள் வழியாக வந்த மாணவ, மாணவிகள் தூய்மையின் அவசியம் குறித்த விழிப்புணா்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனா். முகாம் ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் முனைவா் பி.சாந்தி செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.