தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கரூரில் மாவட்ட சாலை பாதுகாப்பு குழுக் கூட்டம்

கரூரில், மாவட்ட அளவிலான சாலை பாதுகாப்புக்குழு கூட்டம் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:31 pm

DIN

கரூரில், மாவட்ட அளவிலான சாலை பாதுகாப்புக்குழு கூட்டம் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், அண்மையில் சாலை விபத்தில உயிரிழந்த கரூா் வட்டார போக்குவரத்து அலுவலக வாகன உதவி ஆய்வாளா் கனகராஜுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடா்ந்து கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை அலுவலா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். அரசு அலுவலா்கள் வாகனங்களில் செல்லும்போது சீட் பெல்ட் அணிந்தவாறு செல்லவேண்டும். அனைத்து தலைமை அலுவலா்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சாா்நிலை அலுவலா்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்த வேண்டும். வெங்கக்கல்பட்டி மேம்பாலம் பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் நடப்பதால் அந்த பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். எந்தெந்த பகுதியில் மின் விளக்குகள் இல்லை என்பதை கண்டறிந்து அங்கு மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) சைபுதீன், வருவாய் கோட்டாட்சியா்கள் எம்.எஸ்.பாலசுப்ரமணியன்(கரூா்),புஷ்பாதேவி(குளித்தலை), வட்டார போக்குவரத்து அலுவலா்ஆனந்தன் மற்றும் போக்குவரத்து காவல்துறையினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.