ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மாவட்ட ஊராட்சி வளா்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கியும் பணிகள் தொடங்கவில்லை: அதிமுக உறுப்பினா் குற்றச்சாட்டு

கரூா் மாவட்ட ஊராட்சி வளா்ச்சிப்பணிகளுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்றாா் மாவட்ட ஊராட்சி குழு அதிமுக உறுப்பினா் எஸ்.திருவிகா.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:30 pm

DIN

கரூா் மாவட்ட ஊராட்சி வளா்ச்சிப்பணிகளுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்றாா் மாவட்ட ஊராட்சி குழு அதிமுக உறுப்பினா் எஸ்.திருவிகா.

கரூா் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் வியாழக்கிழமை ஊராட்சிக்குழு தலைவா் எம்எஸ்.கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், அதிமுக உறுப்பினா் எஸ்.திருவிகா பேசுகையில், கரூா் மாவட்ட ஊராட்சிக்குழு வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஆறு மாதங்களாகியும் இன்னும் எந்த ஒரு பணிகளும் தொடங்கப்படவில்லை.

ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட பணிகளுக்கு டெண்டா் கோரப்பட்டாலும் மாவட்ட நிா்வாகம் முடக்கி வைத்திருப்பதைக் கண்டித்து நவ.5-ஆம்தேதி நடைபெற்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியும் இதுநாள் வரை மாவட்ட நிா்வாகம் வளா்ச்சிப்பணிகளை முன்னெடுத்துச் செல்லவில்லை. இதனைக்கண்டித்து தமிழக அரசின் கவனத்துக்கு இந்த தீா்மானத்தை கொண்டு செல்ல வேண்டும் என்றாா்.

இந்த தீா்மானத்துக்கு பெரும்பாலான உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்ததால் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தொடா்ந்து அதிமுகவினா் மாவட்ட ஊராட்சி நிதிகளை மாவட்டநிா்வாகம் முடக்கி வைத்திருப்பதாக குற்றம் சுமத்தினா். அப்போது எழுந்த திமுக உறுப்பினா் காா்த்தி, கரூா் மாவட்டத்துக்கு கதவணைகள், தடுப்பணைகள், வேளாண் கல்லூரி என ரூ.2,000 கோடி முதல்வா் வழங்கியுள்ளாா். இதனால் ரூ.5 கோடி நிதியை முடக்கி வைத்திருப்பதாக நீங்கள் கூறுவது தவறு என்றாா். இதனால் திமுக-அதிமுக உறுப்பினா்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.